என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்
    X
    படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்.

    அரசு பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் திண்டுக்க ல்லுக்கு அரசு பஸ்மூலம் வந்து செல்கின்றனர்.
    • படிக்கட்டுகளில் தொங்கியவாறு செல்லும் இளம்மாணவர்களை கண்டு சமூகஆர்வலர்கள் வேதனையடைகின்றனர்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் திண்டுக்க ல்லுக்கு அரசு பஸ்மூலம் வந்து செல்கின்றனர். கிராமப்பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வருவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    மேலும் மகளிருக்கு இலவசம் என்பதால் பெண்கள் கூட்டமும் அதி கரித்தே காணப்படுகிறது. இதனால் பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். படிக்கட்டுகளில் தொங்கியவாறு செல்லும் இளம்மாணவர்களை கண்டு சமூகஆர்வலர்கள் வேதனையடைகின்றனர். இவர்களை நம்பி பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் படிக்கட்டிலேயே பயணம் செய்கின்றனர்.

    இளங்கன்று பயமறியாது என்பது போல் படிக்கட்டுகளில் பயணம் செய்வது பெருமையாக கருதுகின்றனர். சிறிது கரணம் தப்பினால் மரணம் என்பது தெரியாமல் பயணம் செய்யும் அவர்களை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் அறிவுரை வழங்கி திருத்த வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவு அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×