என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையில்லா போகி கொண்டாட மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
    X

    புகையில்லா போகி கொண்டாட மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

    • பிளாஸ்டிக் பொருட்கள் தீங்கு குறித்தும் கையில் பதாகைகளை ஏந்தி சென்றனர்
    • பொன்னேரி பஜார் வீதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை வரை பேரணியாக சென்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் புகையில்லா போகி பண்டிகையை வலியுறுத்தியும், பொதுமக்கள் இடையே பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பொருட்கள் தீங்கு குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    ஜெயா கல்வி குழுமம் தாளாளர் டாக்டர் கனகராஜ் தலைமையில் மாணவ- மாணவியர் கையில் பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி முதல் பொன்னேரி பஜார் வீதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை வரை சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×