search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பம் அருகே முல்லை பெரியாற்றில் மூழ்கி மாணவன் பலி
    X

    கோப்பு படம்.

    கம்பம் அருகே முல்லை பெரியாற்றில் மூழ்கி மாணவன் பலி

    • சுருளிபட்டி சாலை அருகே முல்லை பெரியாற்று யானைகஜம் பகுதியில் குளிக்க சென்றார்.
    • நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    கம்பம்:

    கம்பத்தை சேர்ந்தவர் சையது சுல்தான் இப்ராகிம் மகன் முகமது ராஜிக். இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் தங்கியுள்ளனர். விடுமுறைக்காக அவர்கள் குடும்பத்தினர் கம்பத்திற்கு வந்தனர்.

    அப்போது முகமது ராஜிக் சுருளிபட்டி சாலை அருகே முல்லை பெரியாற்று யானைகஜம் பகுதியில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×