என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி
- தெர்மாகோல் அட்டையை எடுப்பதற்காக தண்ணீருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
- மாணவன் மரணம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள நாலூரை சேர்ந்தவர் அருள்நீதி. இவரது மகன் பிரேம்(12), அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தான். இந்நிலையில் பிரேம் இன்று தனது நண்பர்களுடன் நாலூர் இந்துஜா நகர் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளான். அப்பொழுது தான் வைத்திருந்த தெர்மாகோல் அட்டையை எடுப்பதற்காக தண்ணீருக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளான்.
உடன் இருந்த நண்பர்கள் தனது நண்பனை காணவில்லை என நீருக்குள் மூழ்கி தேடி சிறுவனை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்தபோது மாணவன் பிரேம் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் ஏரியில் குளிக்கும்போது இறந்த செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்