search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி
    X

    நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி

    • தெர்மாகோல் அட்டையை எடுப்பதற்காக தண்ணீருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
    • மாணவன் மரணம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள நாலூரை சேர்ந்தவர் அருள்நீதி. இவரது மகன் பிரேம்(12), அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தான். இந்நிலையில் பிரேம் இன்று தனது நண்பர்களுடன் நாலூர் இந்துஜா நகர் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளான். அப்பொழுது தான் வைத்திருந்த தெர்மாகோல் அட்டையை எடுப்பதற்காக தண்ணீருக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளான்.

    உடன் இருந்த நண்பர்கள் தனது நண்பனை காணவில்லை என நீருக்குள் மூழ்கி தேடி சிறுவனை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்தபோது மாணவன் பிரேம் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் ஏரியில் குளிக்கும்போது இறந்த செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×