search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் அருகே பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை
    X

    கோப்பு படம்.

    பெரியகுளம் அருகே பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை

    • மனமுடைந்த நாகலட்சுமி அளவுக்கு அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கினார்.
    • தேனி க.விலக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே டி.கள்ளிபட்டி சாஸ்திரிநகரை சேர்ந்தவர் நாகமுத்து மகள் நாகலட்சுமி (வயது 15). இவர் பெரியகுளம் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த நாகலட்சுமி அளவுக்கு அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கினார். பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×