search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரள மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் வினீத் எச்சரிக்கை
    X

    கேரள மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் வினீத் எச்சரிக்கை

    • வேளாண் நிலங்களில் இது போல் சட்ட விரோதமாக கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
    • இறைச்சி மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    திருப்பூர் :

    கேரளாவிலிருந்து மருத்துவ மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவது குறித்து திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்த கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- கேரளத்திலிருந்து மருத்துவ மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வந்து தமிழகத்தில் எல்லையோர கிராமங்களில் கொட்டப்படுகிறது. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கேரளாவுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் செக்போஸ்ட் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இது போன்ற கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்கள், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.எல்லையோர கிராமங்களில் பயன்படாமல் உள்ள வேளாண் நிலங்களில் இது போல் சட்ட விரோதமாக கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

    நில உரிமையாளர்கள் இதற்கு துணை போகக் கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் கேரளாவிலிருந்து மருத்துவ, இறைச்சி மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் பின் வரும் எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

    திருப்பூர் கலெக்டர் - 0421 297 1100, எஸ்.பி., - 0421 297 0017, மாசு கட்டுப்பாட்டு வாரியம் - 0421 - 223 6210 மற்றும் 04255 - 252225, பறக்கும் படை - 0421-224 1131.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×