search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் மாநில அளவிலான செஸ் போட்டி
    X

    தருமபுரியில் மாநில அளவிலான செஸ் போட்டி

    • தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் இன்று காலை தொடங்கியது.
    • அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1000- மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    மாநில அளவிலான 24 -வது செஸ் போட்டி தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் இன்று காலை தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் டி .என்.சி மணிவண்ணன் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் செல்வி மணிவண்ணன், துணைத்தலைவர் தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளியின் முதல்வர் கௌசல்யா குத்து விளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1000- மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், ராஜசேகரன், சேகர் பயிற்சியாளர்கள் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×