search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரக அளவிலான எறிபந்து போட்டியில் ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சாதனை
    X

    விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த பள்ளி மாணவ, மாணவிகளை படத்தில் காணலாம்.

    சரக அளவிலான எறிபந்து போட்டியில் ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சாதனை

    • விளையாட்டு போட்டி களில் ஸ்டான்லி மெட்ரி குலேஷன் மேல்நிலை பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டி யில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
    • இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரி குலேஷன் மேல்நிலை பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டி யில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

    பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் U-19 பெண்கள் பிரிவில் முதலிடமும், U-19 ஆண்கள் பிரிவில் முதலிடமும், U-14 ஆண்கள் பிரிவில் இரண்டாமிடமும், பிடித்து வெற்றி பெற் றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்த குமார் மற்றும் சங்கீதா ஆகியோரை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×