என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புனித செபஸ்தியார் ஆலய தேர்த்திருவிழா
- விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை திருத்தேர்பவனி தொடங்கியது.
- பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி வீதிகளில் வலம் வந்ததை ஏராளமான கிறிஸ்தவர்கள் கண்டு வழிபட்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஅள்ளி, பூலாப்பட்டியில் மிகவும் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி தமிழ்நாடு சமூக சேவை சங்க இயக்குனர் ஜேசுதாஸ் மற்றும் கிறிஸ்து பாளையம், தூய ஜான் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லூர்துசாமி ஆகியோர் கொடியேற்றி திருவிழாவை துவக்கி வைத்தனர்.
கடந்த 8-ம் தேதி திங்கட்கிழமை ஆரோக்கியதாஸ் திருச்செங்கோடு நவநாள் திருப்பலி தொடங்கி வைத்தார்.
தருமபுரி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் லாரன்ஸ் பையஸ் தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை திருத்தேர்பவனி தொடங்கியது. இதில் வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித செபஸ்தியார் எழுந்தருளினார்.
பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி வீதிகளில் வலம் வந்ததை ஏராளமான கிறிஸ்தவர்கள் கண்டு வழிபட்டனர். வான வேடிக்கையுடன் நடைபெற்ற இந்த தேர் பவணியில் பூலாப்பட்டி பங்குதந்தை பாதிரியார் புஷ்பராஜ் மற்றும் ஏராளமான மக்களும் கலந்து கொண்டார்கள். விழாவை முன்னிட்டு புனித செபஸ்தியார் ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்