search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் பவித்ரோத்ச திருவிழா
    X

    கள்ளபிரான் கோவிலில் பவித்ரோத்ச திருவிழா நடைபெற்ற காட்சி

    ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் பவித்ரோத்ச திருவிழா

    • தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள நவ திருப்பதிகளில் முதலாவது திருப்பதி தலம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் ஆகும்.
    • ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளபிரான் கோவிலில் 3 நாட்கள் பவித்ரோத்ச திருவிழா நடந்தது.

    தென்திருப்பேரை:

    தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள நவ திருப்பதிகளில் முதலாவது திருப்பதி தலம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் ஆகும். கடந்த 3 நாட்களாக பவித்ரோத்ச திருவிழா நடந்தது. தினசரி நடை பெறும் பூஜை முறைகளில் விடுதல் ஏற்படும்.

    அதனை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதங்களில் பரிகார பூஜைகள் செய்யப்படும். அதேபோல் இந்த ஆண்டும் ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளபிரான் கோவிலில் 3 நாட்கள் பவித்ரோத்ச திருவிழா நடந்தது. 3-ம் நாள் காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9.30 மணிக்கு யாகசாலை ஹோமம் தொடங்கி 11.30 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. பின் திருவாராதனம் நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி தீர்த்தம், சடாரி பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை அர்ச்சகர்கள் ரமேஷ், நாராயணன், சீனிவாசன், ராமானுஜம், சீனு ஆகியோர் செய்திருந்தனர். மாலை 7 மணிக்கு தோழிக்கிணியானில் சுவாமி கள்ளப்பிரான் ஸ்ரீ தேவி பூதேவி தாயார் கொடிமரம் சுற்றி புறப்பாடு நடந்தது. பின்னர் கிருஷ்ணன் குறட்டால் எழுந்தருளினார். மன்னார், சீனிவாசன், ராமானுஜம், பார்த்தசாரதி, சீனிவாசதாத்தம், ஜெகநாதன் ஆகியோர் ராமானுஜ நூற்றந்தாதி பாடல் சேவித்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உற்சவர் தாயார்களுடன் மூலவர் சுற்றி பிரகாரமாக வந்து யதாஸ்தானம் வந்தடைந்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் சீனிவாசன் ராஜப்பா வெங்கடாச்சாரி, வாசன் தேவராஜன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜித் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×