search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகதிகளை பிடித்து சென்ற இலங்கை கடற்படை
    X

    இலங்கை அகதிகள்

    அகதிகளை பிடித்து சென்ற இலங்கை கடற்படை

    • பொருளாதார நெருக்கடி காரணமாக சமீபகாலமாக இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக கடல் வழியாக படகு மூலம் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
    • நேற்று சுமார் 7 பேர் படகில் வந்து தனுஷ்கோடி அருகே உள்ள 3-வது மணல் திட்டு பகுதியில் தவித்தபடி நின்றுள்ளனர்.

    ராமநாதபுரம்:

    எல்லைதாண்டி மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இலங்கை கடற்படையினர் தான், இந்திய எல்லைக்குள் அத்துமீறி வருவதாக ராமேசுவரம் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    பொருளாதார நெருக்கடி காரணமாக சமீபகாலமாக இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக கடல் வழியாக படகு மூலம் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அதேபோன்று நேற்று சுமார் 7 பேர் படகில் வந்து தனுஷ்கோடி அருகே உள்ள 3-வது மணல் திட்டு பகுதியில் தவித்தபடி நின்றுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர்.

    இந்திய எல்லையில் உள்ள அந்த மணல் திட்டு பகுதிக்கு இலங்கை கடற்படையினர் அத்துமீறி வந்து அகதிகளாக வந்தவர்களை இலங்கைக்கு பிடித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×