search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ துரோபதி அம்மன் ஆருத்ரா பவுர்ணமி பூஜை
    X

     களர்பதி பகுதியில் உள்ள ஸ்ரீ துரோபதியம்மனுக்கு ஆருத்ரா சிறப்பு பூஜையில் பக்தர்களுக்கு அருள் பிரசாதத்தை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி வழங்கினார். 

    ஸ்ரீ துரோபதி அம்மன் ஆருத்ரா பவுர்ணமி பூஜை

    • பழமை வாய்ந்த ஸ்ரீ துரோபதி அம்மன் கோவிலில் ஆருத்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • இச்சிறப்பு பூஜை களர்பதி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், களர்பதி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ துரோபதி அம்மன் கோவிலில் ஆருத்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் அம்மனுக்கு பாலாபிஷேகம், பன்னீரபிஷேகம், சந்தன பிஷேகம் தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்தும் அலங்கரிக்கப்பட்ட நிலையில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பலித்தன. இச்சிறப்பு பூஜை களர்பதி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, அதிமுக பிரமுகர் பூபதி, கோவில் தர்மகர்த்தா கோவிந்தராஜ், ஊர் மூப்பர் சீனிவாசன், ஊர் நாயக்கர் கணேசன், ஊர் கவுண்டர் அண்ணாமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

    இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி ஏற்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    Next Story
    ×