என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் பள்ளியில் விளையாட்டு விழா
- முதலாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
- ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.
ஓசூர்,
ஓசூர் டி.வி.எஸ். சாலையில் கொத்தூரில் உள்ள அகஸ்தியா வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி பள்ளியின் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் எம்.நடராஜன் தலைமை தாங்கினார். முதன்மை விருந்தினராக, ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளித் தாளாளர் நடராஜன், ஒலிம்பிக் கொடியையும், பள்ளி முதல்வர் எஸ்.உத்தரியம்மாள், பள்ளிக் கொடியையும் ஏற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
பின்னர், சப்- கலெக்டர் சரண்யா விழாவில் சிறப்புரையாற்றி, பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.விழாவையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் விழாவில், பள்ளித் துணைத் தாளாளர் சிவானந்தா, செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஓசூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் செயலாளர்களான ஜி. லோகநாதன், ஜெ. வெங்கட்ரமணா மற்றும் பல துறையினைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.






