என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
- 27-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது.
- மொத்தம் 580 அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த 7-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 27-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது.
5 பிரிவுகளில் நடந்து வரும் இந்த போட்டிகளில், பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுப்பிரிவினருக்காக விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன. நேற்று அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
இதில் கைப்பந்து, கபடி, கையுந்து பந்து, இறகுப்பந்து, தடகளப் போட்டிகள் மற்றும் செஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண், பெண் இருவருக்கும் நடத்தப்பட்டன. போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
இதில், ஆண்கள் பிரிவில் 400 பேரும், பெண்கள் பிரிவில் 180 பேரும் என மொத்தம் 580 அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்