search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்லியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்
    X

    சிறப்பு யாகம் நடந்தது.

    செல்லியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

    • அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சாமுண்டி யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
    • வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவாச்சாரியர் ராஜா, அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் மற்றும் சிவச்சாரியார்கள் அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சாமுண்டி யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    பின், புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

    தொடர்ந்து, வண்ண மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×