என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்.
வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
- மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
- வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி வரதராஜபெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது மஞ்சள் பொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வரதராஜபெருமாள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






