search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறை-விழுப்புரம் இடையே சிறப்பு ெரயில்கள் இயக்க வேண்டும்
    X

    மயிலாடுதுறை-விழுப்புரம் இடையே சிறப்பு ெரயில்கள் இயக்க வேண்டும்

    • சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் மே 24-ந்தேதி நடக்கிறது.
    • மயிலாடுதுறை-விழுப்புரம் இருமார்க்கத்திலும் சிறப்பு ெரயில்கள் இயக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் மே 24-ந்தேதி நடை பெற்றவுள்ளதையொட்டி மயிலாடுதுறை-விழுப்புரம் இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட வலியுறுத்தி ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் தென்னக ெரயில்வே பொது மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

    அதில் கூறியிப்பதாவது:-

    பிரசித்திப்பெற்ற சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷகம் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே 24-ந்தேதி நடைபெற உள்ளது.

    தேவார திருப்பதிகம் அருளிய திருஞானசம்பந்தர் அவதரித்த தலம், காசிக்கு இணையான அஷ்டபைரவர் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் கோயில் என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடு களிலிருந்து பல லட்சம் பக்தர்கள் வருகைபுரிய உள்ளதாக தருமபுரம் ஆதீனம் செய்தியாளர்கள் சந்திபின்போது தெரிவித்தார்.

    இதனிடையே சீர்காழி ெரயில் நிலையத்தில் பல ெரயில்கள் நின்று செல்வதில்லை என வணிகர்கள், ெரயில் யணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் சீர்காழி ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரன், செயலாளர் முஸ்தபா, பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் மத்திய ரெயில்வே தலைவர், தெற்கு ெரயில்வே பொதுமேலாளர், திருச்சி கோட்ட மேலாளர், இயக்கவியல் மேலாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

    அதில் தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் விரைவு ெரயிலுக்கு சீர்காழி ெரயில் நிலையத்தில் நின்று செல்லவும், மயிலாடுதுறை-விழுப்புரம் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் மூலம் பல லட்சம் பக்தர்கள் பயனடைவர் என அதில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×