search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரத்தில் ஆதிதிராவிடர் பிரதிநிதிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
    X

    பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    ஓட்டப்பிடாரத்தில் ஆதிதிராவிடர் பிரதிநிதிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

    • ஊரக உள்ளாட்சி ஆதிதிராவிடர் பிரதிநிதிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடை பெற்றது.
    • ஆதிதிராவிடர் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும்உரிமைகள் குறித்து பயிற்சி கையேடுகளின் மூலம் விளக்கப்பட்டது.

    புதியம்புத்தூர்:

    தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை சார்பில் ஊரக உள்ளாட்சி ஆதிதிராவிடர் பிரதிநிதிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடை பெற்றது. யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    இதில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், உரிமைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி கையேடுகளின் மூலம் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், மாவட்ட அளவிலான பயிற்றுனர்கள் அழகு நாச்சியார்,அதிசயமணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×