search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலைக்கற்றை முறைகேட்டில் கேரளாவுக்கு விரைந்த தனிப்படை போலீசார்
    X

    கோப்பு படம்

    அலைக்கற்றை முறைகேட்டில் கேரளாவுக்கு விரைந்த தனிப்படை போலீசார்

    • தேனி மாவட்டத்தில் அலைக்கற்றை முறைகேட்டில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர்.
    • அலைக்கற்றை முறைகேடு தனிப்படை போலீஸ் விசாரணை

    தேனி:

    தேனி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். அலைக்கற்றை சேவையில் இருந்து வெளிநாடுகளுக்கு பேசக் கூடிய ஐ.எஸ்.டி. சேவை குறியீட்டுக்கான சிக்னல் அதிகரித்துள்ளது.

    நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் இது செல்லும் போது அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி ஐ.எஸ்.டி. பயன்பாடு அதிகம் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரம், தேனி பெரியகுளம் ரோடு, அல்லிநகரம் பழைய பஸ்ஸ்டாண்டு உள்ளிட்ட 6 இடங்களில் இது போன்ற ஐ.எஸ்.டி. பயன்பாடு அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது.

    போலீசார் விசாரணை யில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த முகமது அலி மகன் சஜீர் (வயது 41). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிப் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் ஒரு பெண்ணுடன் வந்து தங்களுக்கு வீடு வாடகைக்கு வழங்குமாறும் தனது கணவர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் வீட்டு உரிமையாளரிடம் தெரி வித்துள்ளனர்.

    அதன் பிறகு அந்த பெண் வீட்டுக்கு வருவதில்லை. சஜீர், முகமது ஆசிப் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் 31 நவீன தொழில் நுட்ப கருவிகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


    இவர்களிடம் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரி கள், கியூ பிரிவு போலீசார், மத்திய உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி னர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உத்தமபாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட னர். அவர்களை வருகிற 22-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தர விட்டுள்ளார்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், செல்போன் அலைக்க ற்றையை திருடியவர்கள் இதன் மூலம் வெளிநாடு களுக்கு குறைந்த செலவில் பேசுவதற்கும், ரகசிய உரையாடல்கள் மேற்கொ ள்ள வும் பயன்படுத்தி வந்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய தொலைபேசி யில் பேசினால் 5 நிமிட த்துக்கு ஒரு முறை சிக்னல் வெவ்வேறு இடங்களுக்கு மாறிக் கொண்டே இருக்கும்.

    இணையதள குற்றங்கள், சட்ட விரோத சதி திட்டம் தீட்டுதல், பங்யகரவாத செயல்கள் போன்றவற்றுக்கு இது போன்ற தொழில்நுட்ப ங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. கைதான 2 பேரும் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். இதனால் இவர்களுக்கு சம்பளம் வழங்கி மூளையாக செயல்பட்ட நபர்கள் கேரளாவில் தங்கி இருப்ப தாக சந்தேகமடைந்துள்ள னர். இவர்கள் எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் என்ன காரணத்துக்காக பேசியுள்ள னர் என்பது குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    எனவே அடுத்தகட்ட நகர்வாக கேரளாவுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு இதில் முக்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டு ள்ளது. இதனிடையே வீடு வாடகைக்கு எடுத்தபோது மனைவியாக நடித்த பெண் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வரு கின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என போலீ சார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×