search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் பயிலும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை- கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்
    X

    தென்காசி மாவட்டத்தில் பயிலும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை- கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்

    • விண்ணப்பிப்பவர்கள் மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
    • கையுந்துபந்து விளையாட்டில்175 செ.மீ-க்கு மேல் உயரமுள்ள மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    விளையாட்டு விடுதிகள்

    கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

    அதன்படி மாணவர் களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி குத்துச் சண்டை, கையுந்துப்பந்து, பளு தூக்குதல், வாள் வீச்சு மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி கோவில்பட்டியிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்கி விளையாட்டு விடுதியும் மற்றும் மாணவி களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி நேரு உள் விளையாட்டரங்கம் சென்னை தடகளம், குத்துச் சண்டை, கையுந்துபந்து, கால்பந்து, பளுதூக்குதல், ஜுடோ , மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி காட்பாடி வேலூர் கூடைப்பந்து, கைப்பந்து, ஆக்கி, கபடி போன்ற இடங்களில் உள்ளன.

    விளையாட்டு போட்டிகள்

    சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக விளங்குவதற்கு (1.1.2023) 17 வயது நிரம்பிய பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவ, மாணவிகள் தகுதியுடையவர் ஆவர்.

    தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டி களில் விண்ணப்பிப் பவர்கள் மாநில அளவில் குடியரசு தினம், பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப் பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளை யாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளை யாட்டுக் கூட்டமைப்பு ( எஸ்.ஜி.எப்.ஐ.) இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    கையுந்துபந்து விளையாட்டில் 185 - செ.மீ க்கு மேல் உயரமுள்ள மாணவர்கள் மற்றும் 175 செ.மீ-க்கு மேல் உயரமுள்ள மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    விண்ணப்ப படிவம்

    விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப் பத்தினை பூர்த்தி செய்திடுவதற்கான கடைசி நாள் 1.5.2023மாலை 5 மணி வரை ஆகும். ஆன்லைன் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக் கப்படும்.

    சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் 3.5.2023 அன்று காலை 7 மணியளவில் கீழ்கண்ட இடங்களில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளம், குத்துச் சண்டை, பளுதூக்குதல் மற்றும் பெண்களுக்கான கபடி மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து, கையுந்துப்பந்து மற்றும் ஆண்களுக்கான வாள்வீச்சு, பெண்களுக்கான கால்பந்து, கைப்பந்து போன்ற விளை யாட்டுகளுக்கு சென்னை பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 3.5.2023 அன்று காலை 7 மணிக்கும், சென்னை எழும்பூர் எம்.ஆர்.கே. ஆக்கி ஸ்டேடியத்தில் ஆண்கள், பெண்களுக்கான வளைகோல்பந்து தேர்வு போட்டி 3.5.2023 அன்று காலை 7 மணிக்கும் நடைபெற உள்ளது.

    எனவே தென்காசி மாவட்டத்தில் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×