என் மலர்
உள்ளூர் செய்திகள்

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
- கிருஷ்ணகிரி மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவ ட்டத்தில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த18-ந் தேதி தொடங்கியது. நேற்று புரட்டாசி முதல் சனிக்கி ழமையை முன்னிட்டு மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதன்படி, நேற்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த கணவா ய்ப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
கோயிலுக்கு கிருஷ்ண கிரி, தருமபுரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான பக்தர்கள் வந்தி ருந்தனர். சுவாமி சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டது.
இதே போல், வேலம்பட்டி அருகே பெரியமலை கோயில், 50 அடி உயர மலை உச்சியில் உள்ள ஐகொந்த ம்கொத்தப்பள்ளி சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மேல் உள்ள சீனிவாச பெருமா ளை வழிபட்டனர். மூலவர் சீனிவாச பெருமாளுக்கும், உற்சவ மூர்த்திக்கும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சனிக்கிழ மையினை யொட்டி கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதி மற்றும் மார்கெட் சாலை யோரம் பூக்கள் மற்றும் பூ மாலைகள் அதிக அளவில் விற்பனையானது. ஒரு முழம் சாமந்தி பூ ரூ. 30 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல் செண்டுமல்லி, மல்லி பூ உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள், பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
கிருஷ்ணகிரி, ஓசூர் உட்பட மாவட்டத்தின் அனைத்து பெருமாள் கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
அதே போல கனவா ய்ப்பட்டி பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் மொட்டை போட்டுக் கொண்டு தங்களின் நேர்த்தி க்கடனை செலுத்தி னார்கள். நேற்று முதல் புரட்டாசி சனி என்பதால் வழக்கத்தை காட்டிலும் அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் வீடுகளிலும் காலையிலேயே பொதுமக்கள் குளித்து, பெருமாளை வழிபட்டனர்.






