என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    ஆவணி மாத பிரதோ–ஷத்தை முன்னிட்டு தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்க–ளிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ சிறப்பு வழிபாடு தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்க ளிலும் நடைபெற்றது.

    இந்த வழிபாட்டை யொட்டி நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி முதலில் நந்திக்கு பல்வேறு வகை–யான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராத–னைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராத–னைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடை–பெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.

    இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டை–யொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனா கிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வ–ரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை–பெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்–பட்டது.

    தருமபுரி குமாரசாமிப்–பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆவணி மாத சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவா–ணேஸ்வரர் கோவில், அன்ன–சாகரம் சாலையில் உள்ள சித்திலிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வ–ரர் கோவில், சவுலுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட தருமபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

    இதேபோன்று மாவட்டத்–தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகி ரீஸ்வரர் கோவில், ஒகே னக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்–களிலும் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    Next Story
    ×