என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்
ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம்
- சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
- சிறப்பு கூட்டத்தில் அடிப்படை வசதிகள் குடிநீர் வசதி, கிராமங்களுக்கு சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய், பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல் குறித்து விவாதிக்கபட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமை வகித்தார். இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு துணை தலைவர் மாதேஷ்வரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாகேஷ், ரத்னம்மா லஷ்மம்மா , பாக்கியவதி, புஷ்பா, தமிழ்செல்வி மஞ்சுளா, சங்கீதா, லதா, கான்ஞ்சனா, வனீதா, ஹரிஷ், முனிராஜ், வரதன், சேட்டு, ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அடிப்படை வசதிகள் குடிநீர் வசதி, கிராமங்களுக்கு சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய், பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல் குறித்து விவாதிக்கபட்டது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கோபாலகிருஷ்னண், விமல் ரவிகுமார் மற்றும் உதவிபொரியாளர்கள் சுமதி,.ஷியாமளா,வெங்கடேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் (சத்துணவு) ஆகியோர் பேசினர்.
ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு திட்ட வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்து கொண்டனர். இறுதியில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் முகிலன் நன்றியுறை வழங்கினார்.






