search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    விழிப்புணர்வு முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

    • தென்காசியில் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் வக்கீல்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

    தென்காசி:

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தின் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் தென்காசியில் நடைபெற்றது. இதில் தென்காசி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், முதன்மை சார்பு நீதிபதியுமான ரஸ்கின் ராஜ் மற்றும் தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி மாரீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வக்கீல்கள் செந்தூர் பாண்டியன், சங்கர சுப்பிரமணியன் முத்துக்குமார் தாஹிரா பேகம் கவுரி, பூசை துரைச்சி, கிரிஜா கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் குருநாதன் மற்றும் உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×