search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
    X

    சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

    • பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்து, உயர்கல்வி பயிலும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமையன்று இத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட சமூக நலத்துறை சார்பாக இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. இந்த முகாமினை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து, 6 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான வைப்புத்தொகை ரசீதுகள் மற்றும் முதிர்வுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்து, உயர்கல்வி பயிலும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது.

    மேலும் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமையன்று இத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    முதல்-அமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 2022-23ம் நிதியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 624 பெண் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். மேலும், ஏப்ரல் 2023 முதல் தற்போது வரை 154 பெண்குழந்தை களுக்கு இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தி ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    வைப்பீடு செய்யப்பட்ட தொகை பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன், அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கப்படும். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் சுமார் 800 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற்று, உயர்கல்வி படித்து வருகின்றனர்.

    இந்த மாவட்டத்தில் சமூகநல அலுவலக களப்பணி யாளர்கள் மூலம் இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொண்டு,

    புதிய பயனாளிகளை கண்டறியவும், இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிடவும், இத்திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடவும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.

    எனவே, பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தை களை நன்றாக படிக்க வைக்க வேண்டும். இளம் வயது திருமணங்களை முற்றிலும் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×