என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சமயபுரத்து மாரியம்மன்.
சமயபுரத்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
- அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- வண்ணமலர்கள் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் நேற்று சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வண்ணமலர்கள் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






