என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள சிறப்பு முகாம்
    X

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள சிறப்பு முகாம்

    • தங்களுடைய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
    • நாளை (திங்கட்கிழமை) முதல் 11-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடக்கிறது.

    கிருஷ்ணகிரி,

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) செயற்பொ றியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், கிருஷ்ணகிரி கோட்டத்திற்குட்டப்டட மின் நுகர்வோர்கள், தங்களுடைய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    அதன்படி, நாளை (திங்கட்கிழமை) முதல் 11-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை கிருஷ்ணகிரி உபகோட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி சந்தைபேட்டை, பெரியார் நகர், போகனப்பள்ளி, பெத்தனப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, மேல்சோமார்பேட்டை, லைன்கொல்லை, அகசிப்பள்ளி, தேவ சமுத்திரம், பெரிய கோட்டப்பள்ளி, மேல்கரடி குறி, மேல்பட்டி, பி.ஜி.புதூர், செம்படமுத்தூர், தாளாப்பள்ளி, பாலகுறி, பூவத்தி, குந்தாரப்பள்ளி, தானம்பட்டி, நரணிகுப்பம் ஆகிய கிராமங்களிலும்,

    காவேரிப்பட்டணம் உபக்கோட்டத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், போத்தாபுரம் ரேஷன் கடை அருகில், பையூர் பெரியார் சிலை அருகில், நெடுங்கல் பஸ் நிறுத்தம், குண்டலப்பள்ளி அரசு துவக்கப்பள்ளி அருகில், தாசம்பட்டி கூட் ரோடு, மோரனஅள்ளி இந்தியன் வங்கி அருகில், அகரம் கூட் ரோடு, தட்ரஅள்ளி கூட் ரோடு ஆகிய இடங்களிலும், கிருஷ்ணகிரி நகர உபக்கோட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி பஜார் தெரு, தியாகரசனப்பள்ளி, காமன்தொட்டி, உலகம், சாமல்பள்ளம், நேரலகிரி, நல்லூர், நடுசாலை, இ.ஜி.புதூர், வேப்பனஹள்ளி பிடிஓ அலுவலகம் அருகில், நாச்சிக்குப்பம் கூட் ரோடு ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

    மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, மின் இணைப்பு எண் (9 இலக்க அல்லது கட்டண ரசீது), ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தங்களது செல்போன் எண் (ஓடிபி எண் தெரிந்து கொள்ள) ஆகியவற்றுடன் வர வேண்டும். மேலும், மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இயக்க வருகிற 31-ந் தேதியன்று கடைசி நாள் என்பதால், இச்சிறப்பு முகாமினை பயன்படுத்தி ஆதார் எண்ணை இணைத்துக் கொண்டால் மின் பயனீட்டு கட்டணங்களை எளிதாக செலுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×