search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்திவேலூரில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
    X

    வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பரமேஸ்வரர், நந்தி பெருமான், கரட்டூரில் உள்ள சிவன் கோவிலில் உள்ள சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்திவேலூரில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

    வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்திவேலூரில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதை தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திபெருமான், பரமேஸ்வரர், மாசாணியம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து வழிபட்டனர்.

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர்,பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், மற்றும் வேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர்கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமான் மற்றும் நந்திகேஷ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×