என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
    X

    பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜர் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 

    பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

    • மாசி மகம் சதுர்தசியினை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு 9 மணி வரை நடராஜர் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள திருஞானசம்பந்தர் மடாலயத்தில், மாசி மகம் சதுர்தசியினை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு 9 மணி வரை நடராஜர் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    கைலாய வாத்தியம் முழங்க, தேவாரம், திருவாசகம் ஓதலுடன், சிவகாம சுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமான் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகேஸ்வர பூஜை யும், அன்னம் பாலிப்பும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜர் பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர் திருஞா னசம்பந்தர் மடாலயத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜர் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பா லித்த காட்சி.

    Next Story
    ×