என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர், நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதி விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
- பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமானுக்கு, சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகப் பெருமானை, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமானுக்கு, சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்கள், அருகம்புல் மாலையால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகப் பெருமானை, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதேபோல் நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகப் பெருமான், மகா மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், பரமத்திவேலூரில் உள்ள ஹேரம்ப பஞ்சமுக விநாயகர், சக்தி நகரில் உள்ள விநாயகர், நல்லியாம்பாளையத்தில் உள்ள விநாயகர், காவிரி பாலம் அருகே உள்ள சத்திரத்து விநாயகர், பாண்டமங்கலத்தில் உள்ள விநாயகர், பிலிக்கல் பாளையம் விநாயகர், வடகரையாத்தூர் விநாயகர், கபிலர்மலை விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






