என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்.பி திடீர் ஆய்வு
    X

    தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    போலீசார் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்.பி திடீர் ஆய்வு

    • வழக்குகளில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்.
    • பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது, இதில் காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் இரு , நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் காவல் நிலையங்களில் பெண்க ளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் போலீசா ருக்கு வழங்கப்பட்ட வாக னங்களை தருமபுரி மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் பார்வையிட்டு, அந்த வானங்கள் சரியான முறையில் பராம ரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யும் குற்ற வழக்குகளின் தற்போதைய நிலை மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டரிந்தார்.

    கைது செய்யக்கூடிய வழக்குகளில் இன்னும் குற்றவாளிகளின் பிடிக்காத வழக்குகளை விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள் கைது செய்யவேண்டும். மேலும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கவனம் செலுத்தி விரைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    தருமபுரி மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றிட அனைவரும் அதற்கான முயற்சியில் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஏ.எஸ்பி இளங்கோவன், பாலசுப்பிரமணியம் மற்றும் டி.எஸ்.பிக்கள் ஜெயபால், மகாலட்சுமி, சிந்து, ரமேஷ், சத்தியமூர்த்தி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×