என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை
    X

    தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

    • கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் ஆனந்த குமாரின் தாயார் உடல் நலக்குறை வால் இறந்துவிட்டார்.
    • மறு நாள் அதிகாலை 4 மணியளவில், மதுபோதை–யில் ஆனந்த குமார் வீட்டுக்கு வந்துள்ளார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள அய்யகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார் (34). இவரது மனைவி ஷகிலா (27). இருவரும் கட்டிடத் தொழிலாளிகள்.

    கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் ஆனந்த குமாரின் தாயார் உடல் நலக்குறை வால் இறந்துவிட்டார்.

    இதிலிருந்து மனவேதனையில் இருந்து வந்த ஆனந்தகுமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தனது தாயாரை நினைத்து வருந்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் தனது தாயாருக்கு திதி கொடுத்துவிட்டு வேலைக்கு சென்ற ஆனந்தகுமார்

    இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. மறு நாள் அதிகாலை 4 மணியளவில், மதுபோதை–யில் ஆனந்த குமார் வீட்டுக்கு வந்துள்ளார்.

    மனைவி ஷகிலா கணவரை தொட்டுப் பார்த்தபோது ஜில்லென இருந்தது. இது குறித்த அவரிடம் கேட்ட போது தான் விஷம் குடித்து விட்டதாக ஆனந்தகுமார் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் உயர் சிகிச்சைக் காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆனந்த குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×