என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரத்த தான விழிப்புணர்வை வலியுறுத்த அசாம் வரை சைக்கிளில் சமூக ஆர்வலர் பயணம்
- செல்லும் இடங்களில் பொதுமக்களிடம் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
- ஓசூரில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர், அவர் தனது சைக்கிளில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு சென்றார்.
ஓசூர்,
கொல்கத்தா கூப்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெய் தேவ் ரவுத் (53). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். சமூக ஆர்வலரான ஜெய் தேவ் ரவுத், பொதுமக்களிடம் ரத்த தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2022 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கிய அவர், தெலங்கானா, ஆந்திரா மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக நேற்று ஓசூர் வந்தடைந்தார். ஓசூரில், அவருக்கு, சமூக ஆர்வலர் டாக்டர் சண்முகவேல், ஆகியோர் தலைமையில், ஜெய்தேவ் ரவுத்துக்கு சால்வைகள் அணிவிக்கப்பட்டு வரவே ற்பு அளிக்கப்பட்டது. மேலும் நிதியுதவியும் வழங்கப்பட்டது. இதில், அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தற்போது வரை, சைக்கிளில் ஜெய் தேவ் ரவுத் 16,000 கி.மீ. பயணத்தை கடந்துள்ளார். மொத்தம் 25,000 கி.மீ. தூரம் விழிப்புணர்வு பயணத்தை, அவர் மேற்கொள்ள உள்ளார். செல்லும் இடங்களில் பொதுமக்களிடம் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். வருகிற அக்டோபர் 23-ம் தேதி அஸ்ஸாமில் தனது பயணத்தை அவர் நிறைவு செய்ய உள்ளார். ஓசூரில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர், அவர் தனது சைக்கிளில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு சென்றார்.






