என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்பாக்கத்தில் பாம்பு கடித்து முதியவர் பலி
- வீட்டின் அலமாரியில் துணியை எடுத்தபோது அங்கு பதுங்கி இருந்த பாம்பு ஒன்று முதியவரை கடித்தது.
- உடல்நிலை பாதிக்கப்பட்ட மணியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த காரைத்திட்டு பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 60). காவலாளியாக வேலை பார்க்கிறார். கடந்த 10-ந் தேதி, அவர் வீட்டின் அலமாரியில் துணியை எடுத்தபோது அங்கு பதுங்கி இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மணியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்தார். இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






