search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூர் பகுதியில்  சிறுதானிய விழிப்புணர்வு வாகன பிரசாரம்
    X

    சிறுதானிய விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடங்கப்பட்டது.

    வேடசந்தூர் பகுதியில் சிறுதானிய விழிப்புணர்வு வாகன பிரசாரம்

    • சிறுதானியங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன பிரசாரம் தொடங்கப்பட்டது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன பிரசாரம் தொடங்கப்பட்டது.

    வேடசந்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சவுடேஸ்வரி கோவிந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றிய கவுன்சிலர் நாகலட்சுமி மருத பிள்ளை, மாவட்ட கவுன்சிலர் கவிதா முருகன், தட்டாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சத்தீஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குனர் சின்னசாமி,துணை வேளாண்மை அலுவலர் பாலமுருகன்,வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×