என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி
- காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழ கத்தில், வாழ்நாள் கல்வி மற்றும் விரிவாக்கத்துறை சார்பில் தட்டச்சு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது
- பல்வேறு துறைகளில் பயின்று வரும் 150 மாண வர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
சின்னாளபட்டி:
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழ கத்தில், வாழ்நாள் கல்வி மற்றும் விரிவாக்கத்துறை சார்பில் தட்டச்சு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதனை திறன் வளர்ப்பு பயிற்சியாக ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் கல்வி மற்றும் விரிவாக்கத்துறை சிறப்பாக நடத்தி வருகிறது. பயிற்சியின் நிறைவாக தமிழக அரசு நடத்தும் தொழில் நுட்ப கல்வி தேர்வில் பங்கேற்று அரசு சான்றிதழை பெறுகின்றனர். இந்த பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி தருகிறது.
இந்தாண்டிற்கான பயிற்சி வகுப்பினை திறன் மேம்பாட்டு மைய மேலாளர் சுகன் சின்ன மாறன் தொடங்கி வைத்தார். அவர் விழாவில் உரையாற்றிய போது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் பல்வகைத் திறன் பயிற்சி பற்றி எடுத்துரைத்தார்.
பல்கலைக்கழக பதிவா ளர் சிவக்குமார், பேராசிரி யர் ராஜா, வெங்கடேசன், ரமேஷ், ஞானசரண்யா, ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயின்று வரும் 150 மாண வர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்