search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுந்தரபுரம் கடைவீதியில்  எரியாத மின்விளக்குகள்
    X

    சுந்தரபுரம் கடைவீதியில் எரியாத மின்விளக்குகள்

    • சுந்தரபுரம் கடைவீதியில் எரியாத மின்விளக்குகளை பழுது நீக்கி ஒளிரச் செய்ய வேண்டும்.
    • மானாமதுரை பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சியாக இருந்து இந்த ஆண்டில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்தபட்டதில் இருந்து மாதத்தில் 3 நாட்கள் குடிநீர் சப்ளை செய்யப்படாமல் உள்ளது. மேலும் தெரு விளக்குகள் பல எரியாமல் உள்ளன.

    நகரின் முக்கிய கடைவீதியான சுந்தரபுரம் கடைவீதியில் உள்ள தேவர் சிலை ரவுண்டாணா பகுதியில் உள்ள உயர் மின்கோபுர விளக்கு பல நாட்கள் எரியாமல் உள்ளது. வைகை ஆற்று பாலம் முதல் சிவகங்கை ரோடுவரை தெருவிளக்குகளும் எரியாததால் இரவு நேரத்தில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மக்கள் அதிகமாக வந்து செல்லும் முக்கிய கடைவீதிகளில் விளக்குகள் எரியாமல் உள்ளதால் அவகைளை பழுது நீக்கி ஒளிரச் செய்ய வேண்டும். நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடுயின்றி கிடைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மானாமதுரை பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×