என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுந்தரபுரம் கடைவீதியில் எரியாத மின்விளக்குகள்
- சுந்தரபுரம் கடைவீதியில் எரியாத மின்விளக்குகளை பழுது நீக்கி ஒளிரச் செய்ய வேண்டும்.
- மானாமதுரை பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சியாக இருந்து இந்த ஆண்டில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்தபட்டதில் இருந்து மாதத்தில் 3 நாட்கள் குடிநீர் சப்ளை செய்யப்படாமல் உள்ளது. மேலும் தெரு விளக்குகள் பல எரியாமல் உள்ளன.
நகரின் முக்கிய கடைவீதியான சுந்தரபுரம் கடைவீதியில் உள்ள தேவர் சிலை ரவுண்டாணா பகுதியில் உள்ள உயர் மின்கோபுர விளக்கு பல நாட்கள் எரியாமல் உள்ளது. வைகை ஆற்று பாலம் முதல் சிவகங்கை ரோடுவரை தெருவிளக்குகளும் எரியாததால் இரவு நேரத்தில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மக்கள் அதிகமாக வந்து செல்லும் முக்கிய கடைவீதிகளில் விளக்குகள் எரியாமல் உள்ளதால் அவகைளை பழுது நீக்கி ஒளிரச் செய்ய வேண்டும். நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடுயின்றி கிடைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மானாமதுரை பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்