search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவகோட்டையை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம்்
    X

    தேவகோட்டை நகர்மன்ற கூட்டம் நடந்தது.

    தேவகோட்டையை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம்்

    • தேவகோட்டையை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம்் செய்யப்பட்டது.
    • தேவகோட்டை நகர் மன்ற கூட்டரங்கில் நகராட்சி கூட்டம் நடந்தது.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகர் மன்ற கூட்டரங்கில் நகராட்சி கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் சுந்தர லிங்கம் தலைமை தாங்கி னார். துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முதல் நிலை நகராட்சியாக உள்ள தேவகோட்டையை, தேர்வு நிலை நகராட்சியைாக தரம் உயர்த்தும் தீர்மானத்தை தலைவர் சுந்தரலிங்கம் தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.

    பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில், தேவகோட்டை யில் தொழில் பூங்கா உரு வாக்க வேண்டும். சாலை களில் கழிவு நீர் கால் வாய்கள் அமைக்க வேண்டும், பன்றிகள், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். சிமெண்ட், தார் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    அரசு பள்ளிக்கு மாற்று பாதையில் சாலை வசதி செய்து தர வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    அதற்கு சுந்தரலிங்கம் பதிலளிக்கையில், திருப்பத்தூரில் சாலையோரம் உள்ள மண் மேடுகளை அகற்றவும், தேவ கோட்டையில் தொழில் பூங்கா தொடங்க வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகரில் டெங்கு பரவாமல் தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மேலும் உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் கூடுதலாக கொள்முதல் செய்து 27 வார்டுகளிலும் கொசு மருந்துஅடிக்கப்படும் என்றார்.

    Next Story
    ×