search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிமேகலை விருது பெற சமுதாய அமைப்பினர் விண்ணப்பிக்கலாம்
    X

    மணிமேகலை விருது பெற சமுதாய அமைப்பினர் விண்ணப்பிக்கலாம்

    • சிவகங்கை மாவட்டத்தில் மணிமேகலை விருது பெற சமுதாய அமைப்பினர் விண்ணப்பிக்கலாம்.
    • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திலோ அல்லது 04575- 240962 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரின் ஆணையின்படி 2022-23-ம் ஆண்டிற்கு ஊரக மற்றும் நகர்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் அமைப்புகளுக்கு தமிழக அரசால் மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கு மணிமேகலை விருதுக்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இந்த விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில் 25.4.2023-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சிவகங்கையில்உள்ள திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திலோ அல்லது 04575- 240962 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×