என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலதிபர் வீட்டில் துணிகர கொள்ளை
- தொழிலதிபர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
- தொடர் கொள்ளைகளால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆறாவயல் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம். தொழிலதிபரான இவர் திருப்பூரில் வசித்து வருகிறார். மாதத்திற்கு சில நாட்கள் மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இதன் காரணமாக பெரும்பாலான நாட்களில் வீடு பூட்டியே கிடக்கும். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு சிதம்பரத்தின் வீட்டின் கதவை உடைத்த உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். மறுநாள் காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே ஆறாவயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் சேகரிப்பட்டன.
இந்த கொள்ளை குறித்து வீட்டின் உரிமையாளர் சிதம்பரத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்த பிறகு தான் கொள்ளை போன பொயருட்களின் விபரம் மற்றும் மதிப்பு தெரிய வரும்.
ஆறாவயலை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தொழில்நிமித்தம் காரணமாக வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடக்கும். இதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆறாவயல் கிராமத்தில் பூட்டியிருந்த 3 வீடுகளில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர் கொள்ளைகளால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.






