search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலிமனைகளை தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு
    X

    காலிமனைகளை தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு

    • காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.
    • உதவி செயற்பொறியாளர் (மதுரை) வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை தகுந்த தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் காரைக்குடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சிறு, குறு தொழிலாளர் நல சங்க கட்டிடத்தில் தொழில்துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ், கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினார்.

    இதில் தொழில் அதிபர்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்ற விதத்தையும், விற்பனை விகித முறையையும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படித்து முடித்த இளைஞர்கள் காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை பயன்படுத்தி, தொழிற் முனைவோர்களாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் பங்கேற்ற காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பல்வேறு வசதிகள் குறித்து தெரிவித்தனர்.

    இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில்துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

    சிட்கோ கிளை மேலாளர் கலாவதி, காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, உதவி செயற்பொறியாளர் (மதுரை) வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×