search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடைக்காடர் சித்தர் அவதார விழா
    X

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நெல்முடிக்கரை உச்சிமாகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற முளைப்பாரி உற்சவ விழாவில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இடைக்காடர் சித்தர் அவதார விழா

    • இடைக்காடர் சித்தர் அவதார விழா நடந்தது.
    • புண்ணிய ஞான ஷேத்ரா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் கோவில் உள்ளது. இங்கு இடைக்காடர் அவதார விழா நடந்தது. திருவிளக்கு பூஜையை தொடர்ந்து வீதி உலா நடந்தது. பின்னர் ஹோமங்கள், யாகங்கள், பஞ்சபூத வழிபாடு நடத்தப் பட்டது. தொடர்ந்து கோ பூஜை, பரிபூஜை, கிடாய் பூஜை செய்து இடைக்காடர் சித்தருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    இடைக்காடர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் காட்சி யளித்தார். நவக்கிரக சன்னதியிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் மதுரை, சிவ கங்கை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். அவர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை இடைக்காடர் சித்தர் புண்ணிய ஞான ஷேத்ரா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×