என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்ரா பவுர்ணமி: சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 30-ம் ஆண்டு பால்குட ஊர்வலம்
    X

    சித்ரா பவுர்ணமி: சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 30-ம் ஆண்டு பால்குட ஊர்வலம்

    • உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • ஆரணி ஸ்ரீ ஆதிலட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் நரசிம்ம ஜெயந்தி திருவிழா நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 30-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது.

    நகரத்தார் சிறுவாபுரி பாதயாத்திரை சங்கத்தினர் இங்குள்ள அவர்களுக்கு சொந்தமான அன்னதான மண்டப வளாகத்தில் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளுடன், விரதம் இருந்த பக்தர்கள் பால்குடங்களை ஏந்தியவண்ணம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர், மூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர், உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பிரகார புறப்பாடு நடைபெற்றது.

    உற்சவர் பிரகார புறப்பாடு

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் செயல் அலுவலர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நகரத்தார் சிறுவாபுரி பாதயாத்திரை சங்கத்தின் நிர்வாகிகளும், விழா குழுவினரும் செய்திருந்தனர். மதியம் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி ஸ்ரீ ஆதிலட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி மற்றும் நரசிம்ம ஜெயந்தி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று காலை பெருமாளுக்கு விசேஷ அலங்காரம், திருமஞ்சனம், லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்தம், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்யநாராயண பூஜை நடைபெற்றது. பின்னர், கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு ஊராட்சி, அகரம் கிராமத்தில் உள்ள வில்லியர் காலனியில் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் சுமந்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர்,

    சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மதியம் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பால்ராஜ் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் ரோஜா மற்றும் தேவன் ஆகியோர் முன்னிலையில் கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×