search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுமுறை தினம் என்பதால்   ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • இன்றுகாலை 6 மணி நிலவரப்படி 16 ஆயிரம் கனஅடியாக குறைந்து தண்ணீர் வந்தது.
    • தொங்கு பாலத்தில் நின்றவாறு பாறைகளுக்கு இடையே தண்ணீர் விழும் காட்சியை கண்டு கழித்த னர்.

    பென்னாகரம்,

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    இதனால் ஒகேன க்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 20 ஆயிரம் கனஅடிநீர் வந்தது.

    இந்த நிலையில் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி 16 ஆயிரம் கனஅடியாக குறைந்து தண்ணீர் வந்தது.

    இதனால் ஐவர்பாணி, மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேன க்கல்லில் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    தொங்கு பாலத்தில் நின்றவாறு பாறைகளுக்கு இடையே தண்ணீர் விழும் காட்சியை கண்டு கழித்த னர்.

    இளைஞர்கள் எண்ணைய் மசாஜ் செய்து மெயின் அருவியில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    மீன்சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் மீன் வியாபாரம் விற்பனை களைகட்டியது.

    தொடர் விடுமுறையால் ஒகேனக்கல்லில் மக்கள் குவிந்தனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

    Next Story
    ×