search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூரில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
    X

    வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    வாசுதேவநல்லூரில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்

    • கையெழுத்து இயக்க நிகழ்ச்சிக்கு முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார்.
    • தி.மு.க., கம்யூனிஸ்டு, வி.சி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தமிழ்நாடு மாநில கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பபெறக்கோரி ஜனாதிபதியை வலியுறுத்தி, வாசுதேவநல்லூர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாசுதேவ நல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தென்காசி ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செய லாளர் சுதா பாலசுப்பிர மணியன், சதன் திருமலைக் குமார் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட ம.தி.மு.க. துணைச்செயலாளர் சக்தி கோமதி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வாசுதேவநல்லூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய பொருளாளர் மாரிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் மாரிச்சாமி, ஒன்றிய இணைச்செயலாளர் மணி சேகர், வாசுதேவ நல்லூர் ம.தி.மு.க. செயலா ளர் பாசறை கணேசன், தி.மு.க. செயலாளர் பாலசுப்பிர மணியன், மாரிமுத்து, காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், தலைவர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சுப்பையா, இந்திய கம்யூனிஸ்டு முருகன், வி.சி.க. சுரேஷ், முஸ்லீம் லீக் செய்யது சாகுல் ஹமீது, த.மு.மு.க. ஜமால், ம.தி.மு.க. மெடிக்கல் கருப்பையா, மாரியப்பன், விழி மணி, கோமதிசங்கர், முருகன், சந்திரன், ஆனந்த முருகன், சம்சுதீன், காளிராஜ், ராமநாதபுரம் முருகன், ராயகிரி சங்கையா, ம.தி.மு.க. துணைச்செயலாளர் தர்மர், தி.மு.க. மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் ஆசிரியர் செல்லத்துரை, கட்ட பொம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×