search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வணிகர் தினத்தையொட்டி  தருமபுரியில் கடைகள் அடைப்பு
    X

    தருமபுரி நகரில் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    வணிகர் தினத்தையொட்டி தருமபுரியில் கடைகள் அடைப்பு

    • இன்று தருமபுரி மாவட்டத்தில் வணிகர் தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    தருமபுரி,

    ஆண்டுதோறும் மே 5-ந்தேதி வணிகர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று தருமபுரி மாவட்டத்தில் வணிகர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தருமபுரி நகரில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள ஆறுமுக ஆசாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, முகமது அலி கிளப்ரோடு, பென்னாகரம் ரோடு, கடைவீதி, துரைசாமி நாயுடு தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக ஏற்கனவே பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதால் கடை அடைப்பால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நகரில் ஆங்காங்கே மருந்து கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. வணிகர்கள் கடை அடைப்பால் பெரும்பாலான சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல், பாப்பாரப்பட்டி, தொப்பூர், ஏரியூர், பெரும்பாலை, இண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ந்தேதி 40-வது வணிகர் தினம் மாநாடு ஈரோடு டெக்ஸ்வேலி 'மைதானாத்தில் இன்று தமிழகத்தின் அனைத்து வணிகர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள், ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், வெளிமாநில வணிக அமைப்பு தலைவர்கள் என அனைவரின் பங்கேற்புடன் மாநில த்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெறுகிறது.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    Next Story
    ×