search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் அருகே ஏரியில் பற்றி எரிந்த தீ-கிராமத்தினர் அதிர்ச்சி
    X

    ஏரியில் தீ கொளுந்துவிட்டு எரிவதை படத்தில் காணலாம்.

    விருத்தாசலம் அருகே ஏரியில் பற்றி எரிந்த தீ-கிராமத்தினர் அதிர்ச்சி

    • விருத்தாசலம் அருகே ஏரியில் தீ பற்றி எரிந்ததால் கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • நேற்று இரவு திடீரென, மர்மமான முறையில் ஏரியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    கடலூர்:

    விருத்தாசலத்தை அடுத்து மங்கலம்பேட்டைஅருகே பள்ளிப்பட்டு கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி முழுவதும் நிறைய கருவேல மரங்கள், விழல்கள் மற்றும் செடி, கொடிகளும் அடர்ந்து, வளர்ந்துக் கிடக்கிறது. நேற்று இரவு திடீரென, மர்மமான முறையில் ஏரியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    இந்த தீயானது கட்டுக் கடங்காமல் மள, மளவென பரவியது. கிராமப் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை போலீசாரும், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையில், தீயணைப்பு படை வீரர்கள் ஸ்ரீ ரங்கன், கனகராஜ், செல்வம், மற்றும் ஓட்டுநர் அசோக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, தீயை அணைத்தனர். ஏரியின் மொத்த பரப்பளவான சுமார் 40 ஏக்கரில், சுமார் 10 ஏக்கர் அளவுக்கு தீயில் கருகி நாசமானது.

    Next Story
    ×