என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னாகரத்தில் ரூ.1.77 லட்சத்துக்கு எள்ளு ஏலம்
    X

    ஏலத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

    பென்னாகரத்தில் ரூ.1.77 லட்சத்துக்கு எள்ளு ஏலம்

    • பென்னாகரம் மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான மலை கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் எள்ளு சாகுபடி செய்துள்ளனர்.
    • தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் விற்பனைக்கு எள்ளு வரத்தும் அதிகரித்துள்ளது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள்ளு ஏலம் நடைபெற்றது. இதில் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 50 எள்ளு மூட்டைளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.

    ஒழுங்குமுறை விற்பனைக் கூட மேற்பார்வையாளர் வீரன், உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 9 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றிற்கு ரூ.122-ம், குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.115-ம் மற்றும் சராசரி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.117 என ஏலம் நடைபெற்றது. மொத்தமாக 1515 கிலோ எடையுள்ள எள்ளு ரூ. 1,77,880-க்கு ஏலம் போனது. இதில் விவசாயிகளுக்கு உரிய தொகை உடனடியாக வியாபாரிகளிடமிருந்து பெற்று வழங்கப்பட்டது.

    இது தொடர்பாக தருமபுரி விற்பனைக்குழு செயலாளர் ரவி தெரிவித்துள்ளதாவது:-

    பென்னாகரம் மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான மலை கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் எள்ளு சாகுபடி செய்துள்ளனர்.

    தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் விற்பனைக்கு எள்ளு வரத்தும் அதிகரித்துள்ளது.

    இதனால் பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்தாண்டில் எள்ளு ஏலம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வாரந்தோறும் புதன் கிழமைகளில் நடைபெறும் ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்று நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×