என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி அனுமந்தநகரில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
- பிறந்த நாள் விழா திண்டுக்கல் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி அனுமந்த நகரில் கொண்டாடப்பட்டது.
- நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கினார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா திண்டுக்கல் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி அனுமந்த நகரில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் பழனிச்சாமி, கிளை செயலாளர் டாஸ்மாக் மாரிமுத்து, ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் பாலமுருகன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கதிரேசன், முன்னாள் ஊராட்சி செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் பரமேஸ்வரி பாண்டித்துரை, அழகு பொன்னையா, காமாட்சி நகர் கிளை செயலாளர் செந்தில்குமார், மாபல் அறக்கட்டளை கோபி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






