என் மலர்
உள்ளூர் செய்திகள்

4லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை
- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் வாழைத்தார் விற்பனை நிலையத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.
- 3,200 வாழைத்தார் கொண்டு வரப்பட்ட நிலையில், நான்கு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் வாழைத்தார் விற்பனை நிலையத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஒரு கிலோ கதலி 25 ரூபாய்க்கும், நேந்திரம் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்ப ட்டது.
இதேபோல் பூவன் தார் ஒன்று 250 ரூபாய்க்கும் செவ்வாழை தார் ஒன்று 600 ரூபாய்க்கும் தேன் வாழை தார் ஒன்று 550 ரூபாய்க்கும் மொந்தன் தார் ஒன்று 320 ரூபாய்க்கும் ரொபஸ்டோ தார் ஒன்று 350 ரூபாய்க்கும் ரஸ்தாலி தார் ஒன்று 450 ரூபாய்க்கும் விற்பனையானது.
மொத்தம் 3,200 வாழைத்தார் கொண்டு வரப்பட்ட நிலையில், நான்கு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
Next Story